இப்டி இருந்தா எப்டி அவங்க முன்னணியில இருக்கமுடியும்ன்னு
கொஞ்சமாவது யோசிச்சாங்களா??
நாடோடிகள் படத்துல சொல்ற மாதிரி சரித்திரம் முக்கியமானது...
தெரிஞ்சிக்க வேண்டியது...
வருங்காலத்துல பிள்ளைங்க இந்த விஷயத்தபோய் சொல்லாம வுட்டுட்டாங்ளேன்னு google மேல கோபபடமாட்டாங்க??!!
என்ன ஒரு அலட்சியம்! பொறுப்பின்மை!!
அதுக்குன்னு நீங்க எல்லாம் சேந்து google மேல கேசு கீசு போட்றாதீங்க!!
மன்னிக்கறவன் மனுசன்!! மன்னிப்பு கேக்கறவன் பெரிய மனுஷன்!!
எப்ப விஷயத்துக்கு(??!!)வருவான்னு யோசிக்கறீங்க!!
பின்ன என்னங்க!! காலையிலேயே எந்திரிச்சு குளிக்காம, பல்கூடவிளக்காம,
google -ல வந்து AUGUST 25 ன்னு கொடுத்து SEARCH பண்ணா
நம்ம வாயிலயே நுழையாத இங்கிலீஷ்காரங்க பொறந்தது, செத்தது,
ஏதோ 2வது உலகப்போரு, உருகுவே விடுதலையானது,
கலிலியோ தொலைநோக்கிய கண்டுபிடிச்சது,
இந்த மாதிரி நிறைய தேவையில்லாத விஷயமா இருக்குங்க!!
ஆனா பாருங்க!! இந்த பிரபலபதிவர்(அட நான்தாங்க!!)சேலம்தேவாவோட
பிறந்தநாள எப்டி மறந்தாங்கன்னு தெரியல!!
(பிறந்தநாள் அதுவுமா ஒருத்தன திட்டகூடாதுன்ற அடிப்படை நாகரீகம்
தெரியாதவர்கள் அல்ல நம் பதிவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை
உலகத்துக்கு!!?? பின்னூட்டத்துல காட்டுங்க!!!
பரிசு தர முடியலயேன்னு வருத்தப்படாதீங்க!!!உங்க ஓட்டுகளை
நான் பெரியமனசு பண்ணி ஏத்துக்கறேன்!!!)