சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

21.9.10

சேலம்ம்ம்ம்ம்டா.......

என்னடா டா போட்டு எழுதறான்னு தப்பா நெனச்சிறாதீங்க!!
பாஸ் (எ) பாஸ்கரன் படம் பாத்த எபக்ட்!!!

சேலம் தேவான்னு பேர மட்டும் வச்சிகிட்டு சேலத்துக்காக நாம
என்ன செஞ்சிருக்கோம்ன்னு நினைக்கிறப்ப மனசுக்கு ரொம்ப
கஷ்டமா இருந்திச்சுங்க!!(ஒண்ணும் செய்யாம இருந்தாவே நல்லதுதான்)

அதுவும் பாருங்க!! நாம பிரபலபதிவர் (!!??) வேற ஆயிட்டோம்...சந்தேகம்னா இண்ட்லியில போய் பாருங்க.. பிரபலமானவைல நம்ம பேரும் இருக்கும்.
(ஒரு 1000 PAGEVIEWS-க்கே இவனோட அலப்பறை தாங்க முடியல. இவனே ஒரு 500 முறை பாத்திருப்பான்)



சேலத்தில இருக்கறவங்க வெளியூர்ல இருக்கற அவங்க சொந்தக்காரங்கள பாக்கப்போனா முதல்ல அவங்க பையத்தான் பாப்பாங்க...மாம்பழம் வாங்கிட்டு வந்திருக்காங்களான்னு!! அப்டி உலகஅளவில்(!!?? )சேலம் மாம்பழம் பேமஸ்.
மாம்பழமாம் மாம்பழமாம்!! மல்கோவா மாம்பழம்!! சேலத்து மாம்பழம்!!
இந்த பாட்டு தெரியாத சின்னப்பி்ள்ளைங்களே தமிழ்நாட்டுல 
கிடையாதுன்னா பாத்துக்கோங்களேன்!!



தமிழ்நாடே தண்ணியில மூழ்கினாலும் (டாஸ்மாக் தண்ணி இல்லங்க) சேலம் மட்டும் மூழ்காது.(நல்ல எண்ணம்டா) எப்டின்னா,சேலத்த சுத்தி நிறைய மலைகள் இருக்கு. அந்த மலைகள் சேலத்துக்கு அரணா இருக்கு. சேலம்ங்கற பேயரே சைலம்(மலைகள்நிறைந்த) என்ற பெயரோட மரூஉதான்.

நானும் வேலைக்காக பல ஊருக்கு போயிருக்கேன்...
ஆனா,சேலம் மாதிரி ஒரு ஊரை பாத்ததே இல்லீங்க!!

மரியாதையான ஊருங்க இது!

எப்டின்னா,உதாரணத்துக்கு சென்னைத்தமிழை எடுத்துக்கிட்டீங்கன்னா சாதாரணமா பேசுறதே நம்மள கெட்டவார்த்தையில திட்ற மாதிரியே இருக்கும்.
முன்குறிப்பு : பின்னூட்டத்துல யாரும் சென்னைத்தமிழை
பயன்படுத்தி திட்டகூடாது.

மதுரைத்தமிழ் பயபுள்ளைங்க பாசமா பேசுற மாதிரி தெரிஞ்சாலும்
கொஞ்சம் பயமாத்தான்இருக்கும்.
முன்குறிப்பு : அழகிரி அண்ணன்ட்ட போட்டுக் குடுத்துறாதீங்க...

திருநெல்வேலி தமிழுக்கு ஒரு டிக்ஸ்னரிதான் போடணும்.
எது பேசுனாலும் ஒரு லே சேத்துக்குவாங்க.வாலே,போலே,ஷோலேன்னு

ஆனா,சேலத்தில பேசுறது நம்ம சொந்தகாரங்ககிட்ட பேசுற மாதிரியே இருக்கும்.யாரா இருந்தாலும் சொல்லுங்கண்ணே,சொல்லுங்கக்கான்னு மரியாதையா பேசுவாங்க பயபுள்ளைங்க...இளையதளபதி விஜய்
வாங்ண்ணா,போங்ண்ணா ன்னு பேசுறாரே அது எங்க ஊரு ஸ்டைல்தான்...

தவிச்சவாய்க்கு தண்ணி தரணும்ன்னு சொல்வாங்க...ஆனா,எங்க சேலத்து மேட்டூர் அணை பல ஊருக்கே தண்ணி கொடுத்துகிட்டுஇருக்கு.

மலைகளின் இளவரசி ''ஏற்காடு" சேலத்திலதான்இருக்கு.
நடுத்தரவர்க்கத்தினருக்கு அதிக செலவில்லாம சுத்திப்பாக்க
ஏற்காடு ஒரு நல்ல சுற்றுலாத்தலம்.

எங்க ஊரு மாடர்ன் தியேட்டர்ஸ் மட்டும் இருந்திருந்தா
சேலம் இன்னும் எங்கேயோ போயிருக்கும்.
ஏன்னா,சென்னை பிரபலமானதற்கு சினிமாவும் ஒரு முக்கியகாரணம்.
சேலத்திலதான் அப்ப நிறைய படம் எடுத்திட்டிருந்தாங்க...அந்தகால படம் அனைத்திலும் ஏற்காடோ,பனமரத்துப்பட்டி ஏரியோ வராம இருக்காது.
நம்ம முதலமைச்சரு கூட நிறைய படத்துக்கு கதைவசனம் ஏற்காட்டில உக்காந்து எழுதி ரசிகர்களை மகிழ்விச்சிருக்காரு(!!??) இன்னமும் விடாம மகிழ்விக்கிறாரு...அப்டியே தொடர்ந்திருந்தா சேலம் தமிழ்நாட்டோட தலைநகரமா கூட ஆயிருக்கலாம்...

அப்புறம் நிறையபடத்துல நீங்க பாத்திருக்கலாம்.இந்த கால் கொலுச
வச்சி நிறைய சென்டிமென்ட்டான சீன்,பாட்டு எல்லாம் வச்சிருப்பாங்க...
அந்த வெள்ளி கொலுசுக்கு பேமஸ் எங்க ஊருதாங்க...
வெளிநாட்டுக்கெல்லாம் கூட ஏற்றுமதி பண்றோம்.

சேலத்து மனுசங்க மட்டும் இரும்பு மாதிரியில்ல,
சேலம் ஸ்டீல்பிளாண்ட் இரும்பும் உறுதியானது.

அதே மாதிரி ஆடி மாசம் வந்துட்டா சேலம் ஜெகஜோதியா இருக்கும்...
ஹெட் ஆபிஸ் கோட்டை மாரியம்மன் கோவில்
மத்த கோயிலுங்க எல்லாம் பிரான்ச் ஆபிஸ் மாதிரி..
கோயிலுங்கன்னா சும்மா இல்ல...தெருவுக்கு ஒரு மாரியம்மன் கோவில்,காளியம்மன் கோவில்,விநாயகர் கோவில் மட்டும்தான் இருக்கும்.
தெருவ விட கோவிலுங்கதான் அதிகமா இருக்கும்(பக்தியான பயபுள்ளைங்க)
கோயிலுங்களுக்கு நன்கொடை தர்றதுக்கே எதாவது ஒரு லோன் போட்டு ஆவணும்.இல்லன்னா ஊரவிட்டு ஒரு மாசம் ஓடிப்போயிரணும்.
அரசுப்பொருட்காட்சி வேற போட்ருவாங்க...கூட்டம் பின்னும்..
அடாவடிபண்ற பிள்ளைங்கள பொருட்காட்சில தொலைக்கிறதுக்கே
கூட்டிட்டு வருவாங்க...

ஒருமனுசனுக்கு ரொம்ப முக்கியமானது உணவு,உடை,உறைவிடம்
இது மூணும்சேலத்துல இருக்கறமாதிரி வேற எங்கயும் இல்லீங்க!!

மத்த ஊர்ல நீங்க உணவுக்காக ஒருத்தருக்கு செலவு பண்ற காசுல
சேலத்துல ஒரு குடும்பமே சாப்பிடலாம்...அதுவும் சுவையா இருக்கும்.
மத்த ஊர்ல நான் சாப்பிடும் போது இதுக்கு பட்டினி கிடந்தே
செத்துரலாம்ன்னு தோணும்.அவ்ளோ டேஸ்ட்டா(!!??) இருக்கும்.
ஒருசில ஊர்ல குழம்புன்னு சொல்லிட்டு ஊத்துவானுங்க பாருங்க...
அது நம்ம இலையிலயே இருக்காது.
பக்கத்துல இருக்கறவரு இலைக்கு போயிடும்.
சேலத்துல நீங்க 10 ரூபா வச்சிருந்தா போதும்...
வயிறார டேஸ்ட்டா சாப்பிடலாம்ங்க!! உண்மைங்க!!

தட்டுவடை செட்டுக்கு சேலத்த விட்டா எந்தஊரும் ஈக்வல் கிடையாது!!
அதுல நம்ம ஆளுங்க காட்டுவாங்க பாருங்க வித்தைங்க...
கலர்கலரா ஒரு 25 வகை சட்னிய வச்சு கலக்குவாங்க...
50ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுட்டு போய் 10ரூபாய்க்கு
தட்டுவடைசெட் வாங்கி திங்கற தின்னுகெட்டவங்க நாங்க...

ஞாயித்துகிழமை ஆனா ஆறறிவு மனுசன தவிர மத்த எல்லா
உயிரினத்தையும் சொர்க்கத்துக்கு அனுப்புற புண்ணியபூமி இது...
அப்டியே கறிகடைகள்ல கூட்டம் அலைமோதும்..வாழ்க்கையில கறியே திங்காதவங்க மாதிரியே க்யூ வரிசையில நிப்போம்...செல்வி மெஸ்,
மங்களம் ஹோட்டல்,ராமலிங்கம் ஹோட்டல்,கேவீஸ்,ரசிகாஸ்ன்னு
ஏரியா வாரியாபேமஸ் ஆன ஹோட்டல்ங்க நிறையா இருக்கு!!

சேலத்த சுத்தி நிறைய கைத்தறிங்க,விசைத்தறிங்க ஓடுது.அதனால,இங்க எல்லா வகையான துணிங்களையும்,விலை குறைவா வாங்கலாம்.சேலம் பழையபஸ்ஸ்டாண்ட சுத்தி நிறைய துணிக்கடைங்க இருக்கு.ஒரிஜினல் பட்டுப்புடவை வாங்க வசதியில்லாதவங்களுக்கு அபூர்வா பட்டுன்னு ஒரு வகை இருக்கு.அது சேலம் மாவட்டத்துலதான் அதிகமா தயார் பண்றாங்க.

அப்புறம் சென்னை மாதிரி சாப்ட்வேர் நிறுவனங்கள் இன்னும் இங்க
வராததால வீட்டுவாடகை எல்லாம் ஒரளவு நம்ம
பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகற அளவுக்குதான் இருக்கும்.


எங்க ஊரு பெருமைய இன்னும் 50 பதிவு போடலாம்...
ஆனா,நீங்க இவன் சரியான பெருமைபீத்தகளையன்னு திட்டுவிங்க...
(வார்த்தைக்கு அர்த்தம் புரியலன்னா வம்சம் படம் பாருங்க)
அதனால இதோட நிறுத்திக்கறேன்....


மொத்தத்துல இளையராஜா பாடின மாதிரி சொர்க்கமே 
என்றாலும் அது எங்க ஊரு போல வராதுங்க!!!





Post Comment

19.9.10

எல்லாம் இந்த மார்ட்டின் கூப்பரால வந்தது....

அவருதான் செல்போனோட தந்தையாம்!!!
நிம்மதியா இருக்க முடியுதா இந்த இம்சையால
இது பண்ற இம்சை இருக்கே!!
அய்யய்யய்யய்யய்யய்யய்யோயோயோ!!!
(சொற்குறிப்பு: பாஸ்(எ)பாஸ்கரன் படத்தில சந்தானம் 
சொன்னதை நினைத்துக்கொள்ளவும்)
காலையிலயே ஆரம்பிச்சிரும் இதோட தொல்லை...
அலாரம்ன்னு ஒரு வசதி (!!??) கொடுத்திருக்காங்க!!
தூங்கும் போது இடியே விழுந்தாலும் ஏதோ ஊசிபட்டாசு
வெடிக்கற எபக்ட்ல தூங்கறவங்க நாம!!
இதுல இந்த அலாரம்ல்லாம் ஜூஜூபி!!
5 மணிக்கு அலாரம் வச்சி படுத்தா
கரெக்ட்டா 8 மணிக்கு எந்திருச்சிருவோம்...
நம்மள தவிர வீட்ல இருக்கற எல்லாரும்
இந்த சத்தத்தில எந்திருச்சிருவாங்க!!!
அப்புறம் எல்லாரும் சேந்து நாய் கையில மாட்ன தேங்கா மாதிரி
இவனும் தூங்க மாட்டான்!!மத்தவங்களையும் தூங்க விடமாட்டான்!!அப்டின்னு பாராட்டுவாங்க(??!!)

நம்ம முக்கியமா யார்கிட்டயாவது பேசும்போது மட்டும் டவர் கிடைக்காது,
பேட்டரி இருக்காது,பேலன்ஸ் இருக்காது.
(இந்த பாயிண்ட் மட்டும்தான் உண்மை)
அதே ராங்கால் வந்தா மட்டும் மிஸ் ஆகாம கரெக்ட்டா வேலை செய்யும்.
வண்டில அவசரமா போயிட்டு இருப்போம்.அப்பதான் போன் பண்ணி இன்சூரன்ஸ் கம்பெனிலருந்துபேசுறோம்,லோன் கம்பேனிலருந்து பேசுறோம்ன்னு டார்ச்சர் பண்ணுவாய்ங்க...நம்மளும் கடுப்புல வண்டிய ஓட்டிட்டு போய் அப்புறம் இன்சூரன்ஸ்ஸே எடுக்கமுடியாமபோயிரும்...
ஏன்னா,நம்ம உயிரோட இருந்தாதானே...நம்மதான் செல்போன் பேசிட்டே வண்டிய ஓட்டிட்டு போய் லாரிக்கு அடியில மோட்சம் அடைஞ்சிருப்போமே!!
நம்ம நாட்டு நிதி அமைச்சரு பாராளுமன்றத்துல பேசிட்டுஇருக்கும்போது
கூட இந்த கடன்கொடுக்கற பயலுவ விடலயே!!
அவருக்கே கடன் தரேன்னு சொல்லியிருக்கானுவ!!

நொந்துட்டாரு பாவம்!!என்னா டார்ச்சரு!!


இதெல்லாம் கூட பரவாயில்ல இந்த SMS-ன்னு ஒரு இம்சை இருக்கே!!
அய்யய்யய்யய்யய்யய்யய்யோயோயோ!!!
( மெதுவா நடக்கணும்..ரொம்ப வெயிட் தூக்க கூடாது..
ஜாக்கிரதையா இருக்கோணும்...சரியா சாப்பிடணும்...
இதை படிச்சா உங்களுக்கு என்ன தோணுது? ஏதோ கர்ப்பிணி பொண்ணுக்கு அட்வைஸ் பண்ற மாதிரியே இருக்குமே!! அதான் இல்ல!! )
ஏனென்றால், இது 9-வது மாசமாம்.டேக் கேர்.ஹேப்பி செப்டம்பர்.
அப்டின்னு SMS அனுப்பி நம்மள கொலையா கொல்லுவானுங்க ராஸ்கல்ஸ்!!


கல்யாணத்துக்கு முன்னாடி நிச்சயதார்த்தம்ன்னு ஒண்ணு வைப்பாங்க...
இரண்டுக்கும் நடுவுல ரொம்ப கேப் விட்டிங்கன்னா அவ்ளோதான்!! ஏன்னா,மாப்பிள்ளைக்கோ,பொண்ணுக்கோ காது கேக்காம போயிடும்.
காதுல புகை வர்றவரைக்கும்,பேட்டரி பொசுங்கற வரைக்கும்
பேசுவாங்க!! பேசுவாங்க!! பேசிட்டே இருப்பாங்க!! ம்ம்ம்..அப்புறம்...வேற...சொல்லுங்க...இந்த வார்த்தைங்களைத்தான்
மூணு மணிநேரம் விடாம பேசுவாங்க...(அப்புறம்தான் போன் ஆப்பாயிடுமே)




இன்னும் இந்தமாதிரியெல்லாம் நம்ம ஊருக்கு வரலியேன்னு
கொஞ்சம் சந்தோஷமா இருக்கு!!ஆனா,கூடிய சீக்கிரம் வந்துரும். 

சரி இருங்க!! ரொம்பநேரமா போனேவரல!!பாத்துட்டு வரேன்!!

Post Comment

17.9.10

ஏடாகூடம் பார்ட்- 2

பெண்புத்தி பின் புத்தி.
வீட்ல சொல்லிபாருங்க...தெரியும்!!

பிச்சை எடுத்தானாம் பெருமாளு...
அதை புடுங்கி தின்னானாம் அனுமாரு...
ஏங்க பெருமாளுக்கும் அனுமாருக்கும் சண்டை மூட்டி வுடறீங்க?

கழுத கெட்டா குட்டி சுவரு
நல்ல சுவத்து பக்கம் நிக்காதா?

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்
எலக்ட்ரிக் குக்கர்ல கைய வச்சா கை பதமாயிடும்.

கந்தையானாலும் கசக்கி கட்டு
ஏற்கனவே கந்தல் இன்னும் கசக்குனா கிழிஞ்சிடாது!!

கோழி குருடானாலும் குழம்பு ருசியாயிருக்கும்.
எவனோ தின்னு கெட்டவன் சொல்லியிருப்பான் போல!!

பந்திக்கு முந்து படைக்கு பிந்து.
பந்தியில தொந்திய ரொப்பிட்டு அப்புறம் சண்டைக்கு 
போக சொல்லியிருக்காங்க போல

சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது.
சின்னபிள்ளைங்களுக்கு வேலை வச்சா உள்ள தூக்கி போட்ருவாங்க!!

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
தெய்வம் உக்காந்து கொல்லாதா?

கூற மேல ஏறி கோழி புடிக்காதவன்
வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.
ஹைவேஸ்ல வேகமா லாரி வரும்போது குறுக்க போனா 
ஆட்டோமேடிக்கா வைகுண்டம் போயிட்டு போறான்!!


இன்னும் தொடரும்...



Post Comment

16.9.10

ஏடாகூடம்

பழமொழி சொன்னா அனுபவிக்கணும்.ஆராயக்கூடாதுன்னு சொல்வாங்க!!
ஆனா,நாம அப்டி எல்லாம் இருக்க முடியுமா?
என்னைக்கி பெரியவங்க சொல்றத கேட்ருக்கோம்??
ஏன்? எதற்கு?? எப்படி???   இப்டியெல்லாம் கேக்கணும்ன்னு
திருவள்ளுவர் சொல்லியிருக்காரு!!!
( அவரு எப்ப சொன்னாருன்னு உடனே என்கிட்டயே ஆரம்பிச்சிட கூடாது )


ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
(அப்ப பொறுமையா இருக்கறவங்க எல்லாம் அறிவாளிங்களா?)

ஆழம் தெரியாம காலை விடாதே.
(ஆழம்ன்னு தெரிஞ்சா அந்தப்பக்கமே போக மாட்டோம்)

யானை வரும் பின்னே!

மணியோசை வரும் முன்னே!!
( யானைக்கு மணியே கட்டலன்னா என்ன வரும்?? )

புலி பசித்தாலும் புல்லை திங்காது.
( நீங்க எப்ப புலி கூடசேந்து சாப்டிங்க? )

கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை.
(கற்பூரவாசனை கழுதைக்கு ஏன் தெரியணும்??
பேப்பர் வாசனை தெரிஞ்சா போதுமே!!)

ஆத்தில கொட்டினாலும் அளந்து கொட்டணும்.
( கொட்றதுன்னு முடிவாயிடுச்சு.அதை எதுக்கு அளக்கனும்? )

சுத்தம் சோறு போடும்.
( பிரைடு ரைஸ் போடுமா? லெமன் ரைஸ் போடுமா? )

சுவர் இருந்தால்தான் சித்திரம்.
( அப்ப வரையறதுக்கு பிரஸ் வேணாமா? )

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
( அப்ப எதுக்கு டாக்டருங்க? )


கோழி மிதிச்சி குஞ்சு சாகுமா?
( கோழி எதுக்கு அதோட குஞ்ச மிதிக்கணும்? )

தாயை பழிச்சாலும் தண்ணிய பழிக்க கூடாது.
( அப்ப Aquaguard,Pureit எல்லாம் எதுக்கு விக்கறாங்க?
அப்டியே குடிக்க வேண்டியதுதானே? )


இப்டி நிறைய பழமொழி சொல்வாங்க...இன்னும் தொடரும்...
உங்களுக்கு தெரிஞ்ச பழமொழியையும் எழுதுங்க!!







Post Comment

3.9.10

சும்மா விளையாடாதீங்க ....

பாதுகாப்பா விளையாடுங்க ....
டிஸ்கி : ரோஸ் கலர்ல இருக்கறது நீங்க நினைப்பீங்கன்னு நான்நினைச்சது...


விளையாட்டுக்கும் நமக்கும் கொஞ்சம் தூரமுங்க...( ஒரு 500 மீட்டர் இருக்குமா?)

விளையாட்ல விளையாட்டு இருக்கலாம்....ஆனா,வாழ்க்கையில விளையாட்டு இருக்ககூடாதுங்க...( உளற ஆரம்பிச்சிட்டானே!!
மறுபடியும் காய்ச்சல் வந்துருச்சோ? )

அப்படியே விளையாண்டாலும் ரொம்ப கஷ்டப்பட்டு விளையாடற கேரம்போர்டு,செஸ்,சீட்டுக்கட்டு,கண்ணாமூச்சி,வீடியோகேம்ஸ் இந்த மாதிரிதான் விளையாடுவேன்.(சோம்பேறி பய புள்ள... கஷ்டப்படுதாம்...)

ஒவ்வொரு ஸ்கூல்ல விளையாட்டு மைதானமே இருக்காது...
ஆனா,எங்க ஸ்கூல் பக்கத்துல ஸ்டேடியமே இருந்தது.

ஸ்கூல்ல படிக்கும் போது (!!??) எனக்கு ரொம்ப பிடிச்ச பீரியட்
விளையாட்டு பீரியட்தான்....
அதுவும் சாயங்காலமா கடைசி பீரியட்ல வைப்பாங்க...
ஸ்டேடியத்துக்கு கூட்டிட்டு போகும்போதே பாதி பசங்க
வீட்டுக்கு ஒடிப்போயிடுவானுங்க..( அதுல நீயும் ஒருத்தன்தானே... )

மீதிப்பேர் இருக்கானுங்களே...அவனுங்க ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல
கலெக்டர் ஆகியே தீரணும்ன்னு வெறித்தனமா விளையாடுவானுங்க...


நான் ஸ்டேடியத்துல நல்ல குத்தாத புல் வளந்துருக்கற இடமா பாத்து
PT மாஸ்டர்ட்ட யோகாசனம் பண்றேன் சார் அப்டின்னு சொல்லிட்டு
நல்லா தூங்குவேன்...ஹி.ஹி..ஹி...

(எதாவது ஸ்டேடியத்துல போய் கொஞ்சநேரம் வேடிக்கை
பாத்தீங்கன்னா ரொம்ப காமெடியா இருக்கும்.
நல்லா ஆறு நாளும வீட்ல புல் கட்டு கட்டிட்டு தொந்திய
கரைக்கறேன்னுட்டு நடக்கவே முடியாம வாக்கிங் போறவங்க..
பார்க்குக்கு போனா துரத்தி வுடறாங்கன்னு 
ஸ்டேடியத்துல கடலை சாகுபடி பண்றவங்க...
ஆபிஸ் போறேன்னு சொல்லிட்டு வந்து ஸ்டேடியத்துல தூங்கறவங்க..
அப்டின்னு ஸ்டேடியத்துல விளையாட்ட தவிர எல்லாம் செய்வாங்க... 
sunday தவிர) 


அப்பயும் இந்த விதி நம்மள தூங்கவுடாது. எனக்கு விளையாட்டு
வராதுன்னு சொன்னாலும் நீதான் அம்பயர்ன்னு சொல்லி பந்து பொறுக்கி போடவுட்றுவானுங்க...அம்பயர் பந்து பொறுக்க தேவையில்லன்னு கூட எனக்கு தெரியாதுன்னா பாத்துக்குங்களேன்...அவ்ளோ வெகுளி பயபுள்ள..
(வெளயாட தெரியாதத கூட எப்புடி சமாளிக்குது பாரு....)

நான் வேற கேட்ச் பிடிக்கறதல ஜான்டிரோட்ஸ்,கைப் மாதிரி...
(ம்கூம்...அதனாலதான் அவங்க  கிரிக்கெட்ட விட்ட போய்ட்டாங்க )
பந்தே போகாத பக்கமா பாத்து நம்மள நிறுத்துவானுங்க...
அப்பயும் பாத்தா அந்த கருமம் புடிச்ச பந்து நம்ம பக்கமேதான் வரும்.
எப்பயும் போல கரெக்ட்டா கேட்ச்ச மிஸ் பண்ணிருவேன்.

ஸ்டேடியத்துக்கு வெளிய சேமியா ஜீஸ், இந்த ஐஸ் கட்டிய உரசி பந்து
மாதிரி புடிச்சி அதுல கலர் கலரா தண்ணிய ஊத்தி குச்சி ஐஸ் அப்டின்னு
விப்பாங்க...அதுக்காகதான் நான் ஸ்டேடியமே போவேன்.
( இப்பதான் உண்மைய சொல்லியிருக்கான் )

அப்டி ஒருநாள் அந்த ஜீஸ் கடைய பராக்கு பாத்துட்டே
நான் பீல்டிங் பண்ணிட்டு இருந்தேன்.
அப்ப எவனோ ஒருத்தன் சிக்ஸர் அடிக்க ட்ரை பண்ணிருக்கான்.
அந்த பால் என் கிட்னில பட்டு கிட்னி சட்னி ஆயிருச்சி.
ஒரு நிமிஷம் எங்க செத்துப்போனமுன்னோர்கள் எல்லாம்
வரிசையா என் கண்ணுக்கு தெரியறாங்க...
சிக்ஸர் அடிக்க ட்ரை பண்ணவன் கொலை கேசுல மாட்டிரக்கூடாதேன்னு
எனக்கு சேமியா ஜீஸ் வாங்கி என் மூஞ்சில  தெளிச்சு கொஞ்சம் வாயில ஊத்தி  மேல்லோகத்துக்கு  போக போனவன பூலோகத்துக்கு  கூட்டிட்டு வந்தான்.
(தப்பு பண்ணிட்டானே)

டாக்டர்கிட்ட போனா இந்த சினிமாவில வரமாதிரி மூளை புற்றுநோய்,இரத்த புற்றுநோய், வந்தவங்ககிட்ட சொல்வாரே அதே மாதிரி இனிமே நீ ஸ்டேடியம் பக்கம் போனா முடிவு என் கையில இல்லைன்னு சொல்லிட்டாரு...

அப்பதான் முடிவு பண்ணேன்!!!
டிவில விளையாட்ட பாத்தா கூட சேப்டிகார்ட் இல்லாம பாக்க கூடாதுன்னு ...
விளையாட்ல விளையாட்டு இருக்கலாம்.
ஆனா,வாழ்க்கையில விளையாட்டு இருக்க கூடாதுன்னு...

இப்ப விளையாடிட்டு இருக்கறவங்கள பாருங்க..
நான் சொல்றது எவ்ளோ உண்மைன்னு...





என்னோட பேட்டிங் ஸ்டைல் இப்படிதான் இருக்கும்!!??
                                    
                                       ஆதாரத்துக்கே சேதாரம் வந்துரப்போவுது....



பாருங்க..விதிய ஹெல்மேட் போட்டா கூட பால் ரூபத்துல வருது....
எப்படியும் ரெண்டு பல் போயிருக்கும்.

                    
                    ஜெயிக்கற வெறி இருக்கணும்ன்றத தப்பா புரிஞ்சிக்கிட்டாரு...
                                                பால எப்டி கடிக்கிறார் பாருங்க ...


                                            
                        இதுவும் தெரிஞ்சே போய் குழியில வுழுவற மாதிரிதான்...


                                          
                                 வேடிக்கை பாக்க வந்தது ஒரு தப்பாடா???




நல்ல பைக்கா பாத்து எடுத்துட்டு போயிருக்கணும.காயலான் கடையில போட வேண்டியத எடுத்துட்டு போய் உனக்கு ரேஸ் தேவையா???

                                      
                                 இவரு லைப் புல்லா கோமா ஸ்டேஜ்தான்....


                         
                          நம்மள மாதிரி ஒரு சோம்பேறி பயபுள்ள போலஇருக்கு...
                                எது கூட போய் சண்டைக்கு போவுது பாருங்க....



     வாழ்க்கையில கேமராவையே பாத்ததில்ல போலஇருக்கு....



                             எத்தன நாளைக்குதான் குதிர பொறுத்துக்கும்...
                                             அது மேல உக்காந்து இருக்கு .



டேபிள் டென்னிஸ்ன்றத தப்பா புரிஞ்சிட்டு குசும்பு புடிச்ச பயபுள்ளைக
மேல ஏறி உட்காந்து விளையாடுதுங்க....


இப்படி நீங்க சைக்கிள் ஓட்டியே ஆவணுமா??

                             இனிமே விளையாட்ட இது மாதிரி பாதுகாப்பா 
                                      உக்காந்து பாருங்க....ஹி... ஹி... ஹி... 


விளையாட்ட சீரியஸா எடுத்துக்காம ஓட்ட போட்டுட்டு போங்க ... 
(இதுல மட்டும் கரெக்டா இரு.... )

Post Comment