சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

25.11.10

மாதா. .பிதா... கூகிள்....!!

இன்னும் கொஞ்சகாலத்தில இப்டிதான் சொல்லுவாங்க போல இருக்கு..!!




இணையத்தை தொடக்க காலத்தில் உபயோகிக்கும் போது எதப் பத்தி கேட்டாலும் இந்த கூகிளார் சொல்றாரேன்னுட்டு
ஒரே ஆச்சரியமா இருக்கும்..!!

என்னோட ஸ்கூல் வாத்தியாருங்க எல்லாம் நினைவுக்கு வர்றாங்க..!!




எங்க ஸ்கூல்ல பாடம் நடத்திட்டுருக்கற ஒரு சில 
வாத்தியாருங்ககிட்ட சார்..! ஒரு சந்தேகம்ன்னு எந்திரிச்சாலே கன்னாபின்னான்னு திட்டுவாங்க..!!
சாக்பீஸ கொண்டு அடிப்பாங்க..!!
டஸ்டரை நம்ம மூஞ்சில எறிவாங்க..!!
ஏண்ணா..?? அவருக்கே தெரியாது..?!



ஒரு சப்ஜெக்ட் நடத்திட்டு இருக்கற வாத்தியாருகிட்ட
வேற சப்ஜெக்ட் பத்தி கேட்டு பாருங்க..!!
உங்கள தீவிரவாதி மாதிரியே பாப்பாங்க..!!
நமக்கு மட்டும் ஆறு சப்ஜெக்ட் கொடுத்து கொல்றாங்களே..!?
இவரு ஒரு சப்ஜெக்ட் மட்டும் படிச்சி எப்டி வாத்தியாரு
ஆகியிருப்பாருன்னு ரொம்ப புத்திசாலித்தனமா யோசிப்பேன்..!!

பாடம் ரொம்ப போரடிச்சதுன்னா எந்திரிச்சி
எசகுபிசகா சந்தேகம் கேட்டா வாத்தியாரே
நம்மள வெளிய அனுப்பிருவாரு..!!



நவீனயுகத்துல எட்டப்பன்கள் யாருங்கன்னா கிளாஸ் லீடருங்கதான்..!!
தூங்கறதுக்குண்னே ஸ்கூலுக்கு வர்ற ஆசிரியர்கள் கூட இருக்காங்க..!!




அவங்க தூங்கிட்டு இருக்கும்போது அவனவன் என்ன பண்ணான்னு
போட்டுக் கொடுக்கறதுக்குண்ணே ஒரு கிளாஸ் லீடருன்னு ஒருத்தன் இருப்பான். நான் முதல்ல இவனதான் தாஜா பண்ணி வச்சுக்குவேன்.
ஹி.ஹி..ஹி...டீ,காப்பி,போண்டா,வடை வாங்கி தர்றதுக்குண்ணே
சில பேர் இருப்பானுவ அவனுங்கதான் லீடர் வராதப்ப உதவி லீடருங்க..!!

வீட்டுக்காரம்மா திட்னா அந்த எரிச்சலை நம்மகிட்ட வந்து காட்றது..!! வாத்தியாரு பிள்ள மக்குன்னு சொல்ற மாதிரி அவரு புள்ளைங்க பெயிலா போனா அந்த காண்டுல நம்மள வந்து அடி பின்றது..!!
இவரு ஸ்கூல்ல ஒழுங்கா சொல்லித்தராம அவரு நடத்தற
 டீயூசனுக்கு வர சொல்றது..!! எத்த்த்தததன..!!

இதுக்கு மேலயும் இவங்க பண்ற அலப்பறை எல்லாம் அப்பப்ப
நாளிதழ்கள்ல நீங்களே பாத்திருப்பீங்க...

ஆனா நம்ப கூகிளார் எதைக் கேட்டாலும் தர்றாரு..!!
எப்படி கேட்டாலும் தர்றாரு..!! (யாருப்பா அங்க கடன் கேக்கறது..?)
அதனால நான் இனிமே மேல சொன்ன தலைப்புக்கு
மாறிடலாம்ன்னு இருக்கேன்.அப்ப நீங்க..?!

மனசாட்சியோடு பிளாக்கர் உபயோகிக்கறவங்க
எல்லாம் ஓட்டு போடுங்க சொல்லிபுட்டேன்..!!

Post Comment

14.11.10

இது என்னோட தினம்..!!



ஹி.ஹி..ஹி... குழந்தைகள் தினத்த சொன்னேங்க..!
எனக்கு ஒரு குழந்த இருந்தாலும் நானும் இன்னும்
ஒரு குழந்த மாதிரிதான்..!! நம்புங்கப்பா..!!

குழந்தைகள் உலகமே ஒரு சொர்க்கமுங்க..!!
உங்களுக்கு எவ்ளோ கவலைகள் இருந்தாலும்
அவங்கள கொஞ்ச நேரம் பாத்துட்டு இருங்க..!!
 எல்லாத்தையும் மறக்கடிச்சுடும் அவங்க குறும்புகள்..!!












குழந்தைகளாட்டத்தின் கனவையெல்லாம்
அந்தக் கோலநாட்டிடைக் காண்பீரே..!!
இழந்த நல்லின்பங்கள் மீட்குறலாம்..!!
நீர் ஏகுதிர் கற்பனை நகருக்கே..!!

எல்லாத்தையும் பாடின பாரதி குழந்தைகளை பத்தியும் பாடியிருக்காரு..!!

அப்படிப்பட்ட குழந்தைங்களையும் கடத்தி 
கொல்றானுங்கன்னா அவனுங்க மனுசனுங்களே இல்ல..!!

"பாதகம் செய்பவரை கண்டால் நாம் பயங் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா"

குழந்தைங்கள பாதுகாக்கறத விட்டுட்டு அரசு ''குழந்தைகள் தினம்''ன்னு கொண்டாடுறதுல அர்த்தமே இல்ல..!!

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே..!!


மனுசனுக்கு இருக்கற எந்த கெட்ட குணமும் குழந்தைகளுக்கு கிடையாது..!! நாமதான் அவங்களுக்கு கத்துத் தர்றோம்..!!

நல்லதை சொல்லி தருவோம்..!!
குழந்தைங்கள கொண்டாடுவோம்..!!



குட்டிஸ்ங்க எல்லாத்துக்கும் ஹேப்பி சில்ரன்ஸ் டே..!!
( இப்பல்லாம் தமிழ்ல வாழ்த்து சொன்னா குழந்தைங்களுக்கு 
புரியறதுல்ல..!! தமிழை கத்துக்கொடுங்கப்பா..!!)

Post Comment

2.11.10

தீபாவளி ஸ்பெஷல்..!!

தீபாவளி வரப் போவுது..!!
பலகாரம்,பட்டாசு, துணி மணியெல்லாம் வாங்கியாச்சா..?!
(Money இருந்தாதான் துணி எடுக்க முடியும்)

குழந்தைங்களா இருக்கற வரைக்கும் புடிக்கற பட்டாசு
இப்பல்லாம் புடிக்க மாட்டேங்குது..!! வயசாயிடுச்சோ..?!
ஸ்வீட் சாப்பிடவும் பயமா இருக்கு..!!
சக்கரவியாதி சளித்தொந்தரவு பயம்தான்..!!

கேப்பு டுப்பாக்கி,ஊசிவெடி, ஓலைவெடி, லட்சுமிவெடி, சரஸ்வதி வெடி,
வெங்காய வெடி,புஸ்வாணம் கம்பி மத்தாப்பு, சங்குசக்கரம்,
இந்த மாதிரி தமிழ் பேருங்க வச்சதெல்லாம் அந்தக்காலம்..!!

Bloom,Golden Dawn,Blue Wonder,Jasmine Drops,Jewel of India,Mystical Night,Canon Balls,Speed 200 ஏதோ இங்கிலீஷ் பட பேருங்க மாதிரியே இருக்குல்ல..!!
 இதெல்லாம் புதுசா வந்திருக்கற பட்டாசுங்களாம்..!!

 பட்டாசு கடைக்கு போனா டிசைன் டிசைனா பேர் எல்லாம் சொல்வாங்க..!!
நம்ம பயபுள்ளைங்கள கூப்ட்டு போனா எது இருக்கறதுலயே பெரிசா இருக்குமோ அதைதான் வேணும்ன்னு கேக்குமுங்க..!!


 விலைய கேட்டா நமக்குள்ள அணுகுண்டெல்லாம் வெடிக்கும்..!!

வெங்காயவெடின்னு ஒண்ணு இருக்குங்க..!! செம சவுண்ட்டா இருக்கும்..!! தேங்காய கீழ அடிக்கற மாதிரி அத செவுத்துல அடிக்கனும்.
அது விக்கறது சட்டப்படி குற்றம்.அதனால,ஈஸியா கிடைக்காது.
அத வாங்கறதுக்கு ஒசாமாபின்லேடன் ஏதோ அணுகுண்டு வாங்கறதுக்கு போடற மாதிரி பிளான் எல்லாம் போடுவானுங்க நம்ம ஊரு பசங்க...

நாங்க பட்டாசு வெடிக்கறத பாத்து ஊரே கதிகலங்கும்..!!


உடனே இவரு பண்ற மாதிரி பில்டப்பா நெனச்சராதீங்க..!!
சரவெடிய தோள்ல போட்டு வெடிப்பான்..!!
அணுகுண்ட கேட்ச் புடிச்சு வெடிப்பான்ன்னு
கனவு எல்லாம் காணக் கூடாது..!!

ஊசி பட்டாசு வெடிக்கறதுக்கே, இந்த சிலம்பாட்டம் ஆடுவாங்களே..!!
அந்த நீளத்துக்கு ஊதுவத்தி கேப்பேன்னா பாத்துக்கோங்களேன்..!!
இந்த புஸ்வாணம் இருக்கே நம்ம பத்தவெக்கும்போது வெடிக்காது..!!
என்னாச்சுன்னு டெஸ்ட் பண்ணப்போகும்போது
நம்ம மூஞ்சிலதான் வெடிக்கும்..!!

டிவியில இந்திய தொலைக்காட்சியில முதன்முதலா
எத்தன படங்கள் வரப்போவுதுன்னு தெரியல..!!


சரி போகட்டும் நம்ம விஷயத்துக்கு வரேன்
 (அப்ப இதுவரைக்கும் வரவே இல்லியா..??!!)
நம்ம பதிவர்கள் எல்லார் வீட்டுக்கும் வந்து
பட்டாசு தரணும்ன்னுதான் ஆசை..!!
ஆனா பாருங்க நான் கொஞ்சம் பிஸி..!!
அதனால  இந்த லிங்க கிளிக் பண்ணி உங்க
வாண்டுங்களுக்கெல்லாம் பட்டாசு கொடுத்துருங்க..!!
சின்னபுள்ளத்தனமா நீங்க வெடிக்ககூடாது சொல்லிபுட்டேன்..!!
பாத்துபுட்டு கஞ்சப்பயல்,எச்சில் கையால் காக்கை ஓட்டாதவர் அப்டின்னு மரியாதையாக பின்னூட்டம் எல்லாம் போடக்கூடாது..!! ஓகே..!!

அனைவர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!!

Post Comment