சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

17.9.10

ஏடாகூடம் பார்ட்- 2

பெண்புத்தி பின் புத்தி.
வீட்ல சொல்லிபாருங்க...தெரியும்!!

பிச்சை எடுத்தானாம் பெருமாளு...
அதை புடுங்கி தின்னானாம் அனுமாரு...
ஏங்க பெருமாளுக்கும் அனுமாருக்கும் சண்டை மூட்டி வுடறீங்க?

கழுத கெட்டா குட்டி சுவரு
நல்ல சுவத்து பக்கம் நிக்காதா?

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்
எலக்ட்ரிக் குக்கர்ல கைய வச்சா கை பதமாயிடும்.

கந்தையானாலும் கசக்கி கட்டு
ஏற்கனவே கந்தல் இன்னும் கசக்குனா கிழிஞ்சிடாது!!

கோழி குருடானாலும் குழம்பு ருசியாயிருக்கும்.
எவனோ தின்னு கெட்டவன் சொல்லியிருப்பான் போல!!

பந்திக்கு முந்து படைக்கு பிந்து.
பந்தியில தொந்திய ரொப்பிட்டு அப்புறம் சண்டைக்கு 
போக சொல்லியிருக்காங்க போல

சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது.
சின்னபிள்ளைங்களுக்கு வேலை வச்சா உள்ள தூக்கி போட்ருவாங்க!!

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
தெய்வம் உக்காந்து கொல்லாதா?

கூற மேல ஏறி கோழி புடிக்காதவன்
வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.
ஹைவேஸ்ல வேகமா லாரி வரும்போது குறுக்க போனா 
ஆட்டோமேடிக்கா வைகுண்டம் போயிட்டு போறான்!!


இன்னும் தொடரும்...




Post Comment

2 comments:

No Bad Words... தேவா பாவம்!!!