சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

5.9.12

இதுவும் கடந்து போகும்...



நம்ம அரசு இயந்திரத்தோட தாரக மந்திரம் இதுதான்...துயரம் ஏற்படுவதை தடுக்காமல் அது நடந்த பிறகு அரசு நடந்து கொள்வது இந்த வார்த்தையின் அடிப்படையில்தான்....

இன்னும் ஒரு வாரத்துக்கு சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் முழுவதையும் கடமையே கண்ணாக சோதனை செய்வார்கள். அடுத்த மாதமே பழைய கதைதான்...சென்ற மாதங்களில் நடந்த குழந்தைகள் விபத்துகளின்  சோதனைகள் போன்றுதான் இதுவும் இருக்கும். பரபரப்பு பசியோடு திரியும் ஊடகங்கள் மீண்டும் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க அரசு என்னென்ன தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கின்றன என்பதை தொடர்ந்து கண்காணித்து மக்களுக்கு தெரியப்படுத்தலாம். ம்ஹீம்...அதெல்லாம் நம் நாட்டில் நடக்கவே நடக்காது.

நமது குழந்தைகளின் ஆசைக்காக பட்டாசு வெடித்து நாம் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்காக வருடம் தோறும் சிவகாசியில் சில குடும்பங்கள் உயிரிழப்பது வாடிக்கையாகி விட்டது. சட்டங்களை மதிக்காமல் அதில் உள்ள ஓட்டைகளை மட்டும் தெரிந்து வைத்திருக்கும் சில பட்டாசு தொழிற்சாலை முத(லை)லாளிகளுக்கும் ,அவர்கள் கொடுக்கும் லஞ்சப்பணத்தை வாங்கிக்கொண்டு இது போன்ற பாதுகாப்பற்ற ஆலைகளை நடத்த அனுமதி தரும் அதிகாரிகளும் இருக்கும் வரை இந்த துயரம் வாடிக்கையாகத்தான் இருக்கும். அமீரக நாடுகளைப்போல் இங்கும் சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும். இவர்கள் தரும் நிவாரணப் பணம் போன உயிர்களை திருப்பித்தருமா..?! என்னமோ போங்க...  :(

Post Comment

2 comments:

  1. அன்புடையீர் வணக்கம்.
    சிவகாசி வெடி விபத்து மட்டுமல்ல இது போன்ற சம்பவங்கள் எங்கு எப்படி நடந்தாலும் வருந்த்தக்கதே,கண்டிக்கதக்கதே.
    அதே சமயம் இது மாதிரி நடைபெறும் அசம்பாவிதங்களில் எல்லோரும் கிட்டதட்ட அனைவருமே அரசாங்கத்தைக் குறை சொல்வதே வாடிக்கை.அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி.
    ஏன் மக்களாகிய நமக்கு பங்கு இல்லையா?
    ஒரு வாதத்திற்கு பேசுவோம்.அரசாங்கமும் அதிகாரிகளும் தவறே செய்கிறார்கள்.ஆனால் மக்களாகிய நாம் சரியாக இருக்கலாமே? அங்கு பட்டாசுத் தொழிலை நடத்தும் அதிபர்களும் மக்கள்தானே.
    நாம் நடத்தும் தொழிலை நியாயமாகவும்,நேர்மையாகவும் சட்டத்துக்கு உட்பட்டும் தான் இயக்குவேன் என மக்களாகிய நாம் முடிவு செய்து விட்டால் யாருக்கும் லஞ்சம் தந்து செயல்பட வேண்டியது இல்லையே?
    ஒரு ரூபாய்க்கு பட்டாசு தயாரித்தால் மூன்று ரூபாய் இலாபம் என்ற பேராசைதானே இத்தனை உயிர் பலிகளுக்கு காரணம்.
    ஒரு தொழிலாளி எட்டு மணி நேரம் வேலை,நியாமான கூலி,தகுந்த பாதுகாப்பு இருந்தால்தான் வேலை செய்வேன் என்று முடிவு செய்தால் மற்றொரு சக தொழிலாளி அதை விட குறைவாகவும்,எந்த கட்டுபாடும் இல்லாமல் வேலை செய்கிறேன் என போய் நிக்கிறான்.
    அரசாங்கமும் அதிகாரிகளும் கடும் நடவடிக்கை எடுத்தால் அங்குள்ள மற்ற கட்சிகள் (ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும்) தொழிலாளிகளை முடிக்கிவிட்டு வேலை வாய்ப்பு இல்லை,பண்டிகை காலத்தை நாங்களும் எங்கள் குடும்பமும் எப்படி கொண்டாடுவது?சோற்றுக்கே வழி இல்லை என கோசம் போட வைக்கிறார்கள்.
    ஆக இதற்கு நிரந்தர தீர்வு அனைவரும் பொறுப்பேற்கவேண்டும்.சட்டத்தின் விதிகளை கடுமையாக அனைவரும் பின்பற்ற வேண்டும்.
    நன்றி.வணக்கம்.
    கொச்சி தேவதாஸ்

    ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!