சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

10.8.11

ஆடித்திருவிழா

திருவிழாக்கள் பண்டையகாலத்திலிருந்து எல்லா மதத்தினராலும் விதம்விதமாக கொண்டாடப்படுகிறது.திரு என்ற அடைமொழி சேர்த்து விழாக்களுக்கும் மரியாதை கொடுப்பது நமது பண்பாடாக விளங்குகிறது.எதையும் கொண்டாட்டத்துடன் அணுகும் முறை இந்தியர்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது.எப்போதும் பாடுபடும் பாட்டாளிகளுக்காக ஒரு மாறுதல் வேண்டும் என்பதற்காக தெய்வ நம்பிக்கையையும் சேர்த்து திருவிழாக்களை உருவாக்கி வைத்துள்ளனர்.சொந்தங்கள் சேர்வதற்கும்,மனமகிழ்ச்சிக்காகவும்,விழாக்கள் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு வருமானத்திற்காகவும் திருவிழாக்களை உருவாக்கி வைத்துள்ளனர் முன்னோர்கள்.திருவிழாக்கள் நடக்கும் ஊர்களின் பண்பாடு,கலாச்சார குறியீடுகளை அறிந்து கொள்ள திருவிழா ஒரு வழியாக இருந்தது.ஸ்ஸ்ஸ்ப்பா...தூக்கம் வருதில்ல..

ஹி.ஹி..தவறி வேற எதாவது வலைப்பூவுக்கு வந்துட்டமோன்னு பயப்படாதீங்க...ஸ்கூல் படிக்கும்போது எதைப்பத்தியாவது கட்டுரை எழுதச்சொன்னா இப்டி பக்கம்பக்கமா அடிச்சி வுடுவேன்.இது ஒரு சாம்பிள்தான்...வேற ஒண்ணுமில்லீங்க.சேலத்துல ஆடித்திருவிழா நடக்குது.பதிவுலக நண்பர்களை சேலம் திருவிழாவுக்கு அன்போடு அழைக்கிறேன்.

கோட்டை மாரியம்மன் கோவில் கோபுரம்

பதினெட்டுபட்டிக்கும்(?!) தலைமை மாரியம்மன் கோட்டை மாரியம்மன் கோவில்ல ஆரம்பிச்சி ஊர்ல எந்த பக்கம் திரும்பினாலும் கோவில்களா இருக்கும்.அதுல எல்லாக் கோவில்லயும் ஆடி மாசம் பண்டிகையா இருக்கும்.அரசுப்பொருட்காட்சி வேற போட்ருக்காங்க.சேலமே ஜெகஜோதியா இருக்கும்.ஒரு வாரத்துக்கு சேலம் ரத்தபூமியா மாறிடும்.முதல்வர் அம்மா இலவசமா கொடுக்கறதுக்கு வெளி மாநிலங்கள்ல ஆடு,மாடு வாங்கறதுக்கு காரணமே சேலம் மக்கள்தான்.ஏன்னா அப்டி தின்னுவோம்.ஹி..ஹி...

சக்திஅழைக்கறதுன்ற பேர்ல ஒருத்தருக்கு காளியாத்தா மூஞ்சி கொண்ட மாஸ்க் எல்லாம் வச்சு எட்டு கை வச்சி அழைச்சுட்டு வருவாங்க.பம்பை மேளத்தோட அவரு ஆடி வரும்போது ஆல் லேடிஸ் சாமி வந்து ஆடுவாங்க.ஒரே பக்திப்பரவசமா இருக்கும்.தலைவர் கவுண்டமணி பூமிதிச்ச கதை உங்களுக்கு தெரியும்.அதுமாதிரி இங்க எல்லாக்கோயில்லயும் மிதிப்பாங்க.அந்தப்பக்கமே போக மாட்டேன்.எவனாவது நம்மள மிதிக்கச்சொல்லிட்டா..?!பூச்சட்டின்னு சொல்லிட்டு நெருப்புசட்டிய தூக்கிட்டு தலையில வச்சிகிட்டு ஆடுவாங்க.உள்ள சுட்டாலும் வெளிய காமிக்காம செமயா டான்ஸ் ஆடுவாங்க.எனக்கு தெரிஞ்சு ஒருத்தருக்கு தலையெல்லாம் வெந்திருக்கு.ஆர்வக்கோளாறுல தலையில சேப்டி பிரிகேசன்ஸ் எல்லாம் பண்ணாம ஆடிட்டாரு.ஹி..ஹி...

அலகு குத்தறதுன்ற பேர்ல நல்ல கூரான வேலை வாய்ல இந்தப்பக்கம் குத்தி அந்தப்பக்கம் இழுத்து அந்த வலியிலயும் டான்ஸ் ஆடிகிட்டு வருவாங்க.ஆட்டோ,ஆம்னிவேன்,ஆட்டுக்கல் இந்தமாதிரி இழுக்க முடிஞ்ச பொருட்களை கயித்துல கட்டி கொக்கி போட்டு முதுகில குத்தி இழுத்துட்டு வருவாங்க...வேண்டுதலாமாம்.புல்டோசர்,லாரி மாதரி பெரிய பொருள்லாம் இழுக்க மாட்டாங்க.ஹி..ஹி...முதுகு கிழிஞ்சிருமுல்ல.வித்தியாசமா வேண்டுதல் நிறைவேத்தறதுல சேலம் வழி எப்பவும் தனிதான்.

வியாழக்கிழமை குகைப்பகுதியில்(சேலத்துல ஒரு ஏரியா) வண்டிவேடிக்கை நடக்கும்.ஒரே வேடிக்கையா இருக்கும்.புராண காட்சிகள்,சாமி வேஷம் எல்லாம் போட்டுகிட்டு பெரிய வண்டிங்க வரும்.சாமிங்க எல்லாம் நமக்கு ஹாய்...சொல்லிட்டு வரும்.டே..பீமா..நல்லா தெம்பா உக்காந்து வாடா...சிவனுக்கு சீக்கு வந்தமாதிரி வர்றான் பாரு...அனுமார் வேஷத்துக்கு அவனுக்கு மேக்கப்பே தேவையில்ல.ஏற்கனவே அந்த மாதிரிதான் இருக்கான்.ராமர் வேஷம் போட்டுகிட்டு எல்லாப்பொண்ணுங்களுக்கும் டாட்டா காட்டிகிட்டு வர்றான் பாரு...இந்தமாதிரி வேஷம் போட்டுகிட்டு வர்றவங்கள செமயா கலாய்ப்பாணுங்க.குசும்பு புடிச்ச (சேலம்) பயலுவ.

இதெல்லாம் பாக்கும்போது பெரியார் அப்பப்ப மைண்ட்ல வந்துட்டு போவாரு.இந்த செலவுகளை ஏதாவது இல்லாத குழந்தைகளுக்கோ,முடியாதவங்களுக்கோ உதவி பண்ணலாம்ன்னு நெனைக்கத்தோணும்.பண்ண மாட்டாங்க...சாமிக்கு கூட அதுதான் பிடிக்கும். பக்தி எனக்கும் இருக்கு. நம்மை மீறிய ஒரு சக்தி நம்மள இயக்குதுன்ற நம்பிக்கை மட்டுமே.மத்ததெல்லாம் மற்றவங்க விருப்பத்துக்காகத்தான் பண்ணிகிட்டு இருக்கோம்.ஆத்திகர்களுக்கு பக்தியாகவும்,நாத்திகர்களுக்கு கேலியாகவும் தோன்றும்.ம்ம்ம்...வளரும் சூழ்நிலைதான் தீர்மானிக்குது.

இதுபோன்ற காட்சிகள்,கலாய்ப்புகளை நேரில் காண வருக.. வருக.. வருக... என அன்போடு அழைப்பது உங்கள் சேலம் தேவா..தேவா..தேவா..ஹி..ஹி... எக்கோ எபக்ட்டோட படிங்க(இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல)

Post Comment

5 comments:

  1. நீங்க ஒரு நல்ல நிகழ்ச்சி தொகுப்பாளராக வரும் திறமை இருக்கிறது. ஜாலியா எழுதி இருக்கிறீங்க...

    ReplyDelete
  2. வந்து பாப்போம்

    ReplyDelete
  3. அழைப்புக்கு நன்றிங்க வருகிறோம் ...

    ReplyDelete
  4. அருமையான பதிவு.

    ReplyDelete
  5. அழைப்புக்கு நன்றி........

    ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!