![]() |
| கண்ணு பட்ருமுல்ல... அதனால கோட்டோவியம். |
எங்கேயோ படித்த ஞாபகம்.ஒரு வரி நாம் எழுதுவதாக இருந்தால் நான்கு வரிகளை படித்திருக்கவேண்டுமாம்.நான் ஃபாலோ பண்றவங்க லிஸ்ட்ட பாத்தீங்கன்னா தெரியும் நான் ஏன் அதிகம் எழுதறதில்லைன்னு..அவ்ளோ பேரையும் படிச்சிட்டே இருந்தா எங்க எழுதறது..?! இப்டியே போனா நம்ம பிளாக்க கூகிளார் இழுத்து மூடிடுவாருன்னுதான் இந்த பதிவு.ஏன்னா...நம்மளயும் நம்ம்ம்ம்ப்ப்பி ஒரு 73 பேர் பின்தொடர்றத நெனச்சா தெய்வத்திருமகள் படம் பாத்து அழுதத விட அதிகமா அழுகை வருது.
இன்னிக்கு என்னோட தெய்வத்திருமகளோட பர்த்டே...நாட்ல (கேக்) விலைவாசி எவ்ளோ ஏறிப்போச்சு. அம்மா ஆட்சிக்கு வந்தும் இதெல்லாம் கண்டுக்க மாட்றாங்களே...தேன்கூட்ல கைய வச்ச மாதிரி சமச்சீர் கல்வி திட்டத்த அமுல்படுத்தறதுல சொதப்பி பெத்தவங்க வயித்தெரிச்சல வாங்கி கட்டிகிட்டாங்க.யாரை குத்தம் சொல்றதுன்னே தெரியல..என் பொண்ணுக்கு ஒரு வயசு இன்னிக்கு.ஸ்கூல் சேத்தறதுக்குள்ள ஒரு நல்ல முடிவா எடுத்துட்டா பரவால்ல...ஹி..ஹி... ஒவ்வொரு மனுசனுக்கு ஒவ்வொரு பீலிங். வந்ததும் வந்தீங்க.. வாழ்த்திட்டு போங்க... என்ன இல்லீங்க... என் மகளை..!!
