சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

31.7.11

சென்னையில் நான்...

இருங்க.. இருங்க... அவசரப்படாதீங்க. உடனே என்னை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் சென்னை வாசகர்கள்(?!) எனக்கு மெயிலவோ,போன் பண்ணவோ ஆரம்பிச்சிராதீங்க.சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்துட்டு ஊர் திரும்பிட்டேன்.எனக்கு எங்க தலைவர் வெங்கட் மாதிரி பப்ளிகுட்டி பிடிக்காது.


சென்னை நந்தம்பாக்கம் டிரேட்சென்டரில் பைசெல் நிறுவனத்தாரால் வருடாவருடம் நடத்தப்படும் அகில உலக புகைப்படகண்காட்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைக்காவிட்டாலும் நானாகவே போய்டுவேன்.ஹி..ஹி...நாளைக்கு ஒரு நாள்தான்(ஞாயிற்றுக்கிழமை) நடக்கும். நேரமிருந்தா போய் பாருங்க வாசகர்களே..!!சினிமாவுக்கு பயன்படுத்தப்படும் கேமராக்கள்,உபகரணங்களை நேரில் பார்க்கலாம்.

சேலத்துலருந்து சென்னைக்கு ஓட்டிகிட்டு இருந்த ப்ளைட் வேற கேன்சல் பண்ணிட்டாங்க...ஆன்லைன்ல ரயில் டிக்கெட் புக் பண்றதுக்கு ஸ்பெஷல் கோர்ஸ் படிக்கணும் போல...அதனால பஸ்ல வரவேண்டியதா போச்சு.

    ஊராங்க அது.  எங்க பாத்தாலும் ஒரே மக்கள்கூட்டம்.அதுக்கு மேல ஆட்டோ கூட்டம்.கண்ண கட்டி கண்மாய்ல தள்ளிவிட்டமாதிரி இருந்துச்சு.அங்க வண்டி ஓட்டணும்ன்னா தியானவகுப்புக்கெல்லாம் போயிருக்கணும்.இல்லைன்னா டென்சன்ல BP எகிறிடும்.சேலத்துலதான் ஆட்டோ அதிகம்ன்னு நெனச்சா சென்னையில...அடேங்கப்பா...மெட்ரோ ரயிலுக்காக அங்கங்க டிராபிக் திருப்பிவிட்ருக்காங்களாம்.ஆட்டோக்காரர் வேஸ்ட் திட்டம்ன்னு திட்னாரு.என்ன கடுப்போ..?!

அடுத்த தடவை வந்தா மேப்போடதான் வரணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்.திருப்பதி போய் லட்டு வாங்காம வரக்கூடாதோ அது மாதிரி சென்னைக்கு போய்ட்டு தி.நகர் போகாம வரக்கூடாது.ஹி.ஹி.. என்னா கூட்டம்.அங்காடித்தெரு படம் எந்த கடையில எடுத்துருப்பாங்கன்னு தெரியல.கடையில வேல பாக்கற யார பாத்தாலும் அந்த படம் ஞாபகத்துக்கு வந்து இம்சை பண்ணிச்சு.

அடுத்த தடவை சென்னை வரும்போது கண்டிப்பா உங்களுக்காக நேரம் ஒதுக்கி அனைவரையும் சந்திப்பேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொல்கிறேன்.ச்சீ..கொள்கிறேன்.

சென்னை வாசகர்கள் சென்னையை சுற்றிப்பார்ப்பதற்கு உதவி செய்யும் இணையதளத்தை பின்னூட்டத்தில் பகிர்ந்தால் மற்ற ஊர் வாசகர்கள் பயனடைவார்கள்.ஹி..ஹி... நானும்தான்.

Post Comment

27.7.11

தெய்வத்திருமகள்..!

கண்ணு பட்ருமுல்ல... அதனால கோட்டோவியம்.

போன வருஷம் இதே நாளில் என் மகள் பிறந்தநாள்.கூடவே உங்களுக்கு ஒரு தொல்லையும் பொறந்துச்சு..ஹி.ஹி.. நான் பிளாக் எழுத ஆரம்பிச்சத சொன்னேன்.

எங்கேயோ படித்த ஞாபகம்.ஒரு வரி நாம் எழுதுவதாக இருந்தால் நான்கு வரிகளை படித்திருக்கவேண்டுமாம்.நான் ஃபாலோ பண்றவங்க லிஸ்ட்ட பாத்தீங்கன்னா தெரியும் நான் ஏன் அதிகம் எழுதறதில்லைன்னு..அவ்ளோ பேரையும் படிச்சிட்டே இருந்தா எங்க எழுதறது..?! இப்டியே போனா நம்ம பிளாக்க கூகிளார் இழுத்து மூடிடுவாருன்னுதான் இந்த பதிவு.ஏன்னா...நம்மளயும் நம்ம்ம்ம்ப்ப்பி ஒரு 73 பேர் பின்தொடர்றத நெனச்சா தெய்வத்திருமகள் படம் பாத்து அழுதத விட அதிகமா அழுகை வருது.

இன்னிக்கு என்னோட தெய்வத்திருமகளோட பர்த்டே...நாட்ல (கேக்) விலைவாசி எவ்ளோ ஏறிப்போச்சு. அம்மா ஆட்சிக்கு வந்தும் இதெல்லாம் கண்டுக்க மாட்றாங்களே...தேன்கூட்ல கைய வச்ச மாதிரி சமச்சீர் கல்வி திட்டத்த அமுல்படுத்தறதுல சொதப்பி பெத்தவங்க வயித்தெரிச்சல வாங்கி கட்டிகிட்டாங்க.யாரை குத்தம் சொல்றதுன்னே தெரியல..என் பொண்ணுக்கு ஒரு வயசு இன்னிக்கு.ஸ்கூல் சேத்தறதுக்குள்ள ஒரு நல்ல முடிவா எடுத்துட்டா பரவால்ல...ஹி..ஹி... ஒவ்வொரு மனுசனுக்கு ஒவ்வொரு பீலிங். வந்ததும் வந்தீங்க.. வாழ்த்திட்டு போங்க... என்ன இல்லீங்க... என் மகளை..!!

Post Comment