சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

31.12.10

சபதம் ஏற்போம்..!! சாதம் தவிர்ப்போம்..!!

"மாற்றம் ஒன்றே மாறாதது" (நோட் பண்ணுங்கப்பா)
புது வருஷம் வரப்போவுது..!!
என் மகள் பிறந்த வருடமா இருக்கறதால 2010 வருடம்
எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.  கூகிளாரோட புண்ணியத்துல
என்னோட பிளாக்க ஆரம்பிச்சி உங்களயெல்லாம்
இம்சை பண்றதுலயும் இந்த வருடம் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.

எனக்கு ஒரு டவுட்டுங்க..?! தமிழ்நாட்ல இருக்கற மாதிரி எல்லா நாட்லயும் ஆங்கில வருடப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்புன்னு (கூடுதலா தெலுங்கு வருடப்பிறப்பு வேற ) தனித்தனியா இருக்குமா..?!





ஒவ்வொரு வருஷ ஆரம்பத்திலயும் இந்த வருஷமாவது
ஒரு சில விஷயத்த தவறாம செய்யணும்ன்னு தீர்மானம் போடுவேன்.
ஆனா பாருங்க, முத நாளே அத செய்ய முடியாது.


1.காலையில் 5 மணிக்கு எழுந்து சூரியோதயத்தை பார்க்க வேண்டும்.
இந்த டிவி காரனுங்களாலதான் என்னோட தீர்மானம் எல்லாம் சொதப்பிடுது.புத்தாண்டுக்கு முதல்நாள் இரவு போடற நிகழ்ச்சிகள்
எல்லாம் பாத்துட்டு படுத்தா சூரியன்தான் என்னை வந்து பாக்கணும்.
கெரகம் காலையில 8 மணி ஆயிருக்கும்.இந்த செல்போன் அலாரத்துக்கு மட்டும் வாய் இருந்திச்சின்னா நாம வெட்கப்படற அளவுக்கு திட்டும்.ரொம்ப பொறுப்பா அலாரம் வச்சிட்டு காலையில் அது அடிக்கும்போது ஆப் பண்ணிட்டு கீழே போட்டு அதுக்கு மேலேயே படுத்தா அதுக்கு கோபம் வராது..?!







2.ஒரு மணிநேரம் வாக்கிங் போக வேண்டும்.
"10 கிலோ லட்சியம் 2 கிலோ நிச்சயம்" 
ஏதோ அண்ணாவோட அறிக்கைன்னு நினைக்காதீங்க..!!
இப்படிதான் வருஷாவருஷம் புது வருஷத்துல உடம்ப 
குறைக்கிறேன்னுட்டு சபதம் எடுப்பேன்..!!
சிங்கிள்பேக்கா இருக்கற வயித்த சிக்ஸ்பேக்கா 
மாத்தலாம்ன்னு பத்து வருஷமா தீர்மானம் போடறேன்..!!
வீட்ல வடிச்சி கொட்ற சாதத்துல என் சபதம் சப்தம் இல்லாம போயிரும்.
அரசியல்வாதிங்க வாக்குறுதி மாதிரி
இது வரைக்கும் நிறைவேறினதே இல்ல..!!

3.கோபம் கொள்ளக்கூடாது.
முத நாளே போட்ட தீர்மானத்தில இருந்து காலையில எந்திரிக்கறதும்,
வாக்கிங் போறதும் நிறைவேத்த முடியலயேன்னு கோபம்கோபமா வரும்..!!
டென்சன் ஆகி சொறிநாய் கடிச்ச வெறிநாய் மாதிரி ஆகி பாக்கறவங்கள எல்லாம் கடிச்சி வைக்க வேண்டியதுதான்..!!

4.திட்டமிட்ட நேரத்தில் செய்ய வேண்டும்.
திட்டு வாங்கியே பழக்கப்பட்ட எனக்கு
எங்க போய் திட்டமிட்ட நேரத்தில் செய்றது..?!
எல்லாம் லேட்தான்..!! இனிமே பிளான் பண்ணி பண்ணனும்..!!




எனக்கு இந்த தண்ணி அடிக்கறது,தம் அடிக்கறது-ன்ற மாதிரி உலகின் பேரின்பங்கள் மேல பற்று இல்லாததால அதைப்பத்தி எழுதல..!!
நிறைய பேரு புது வருஷத்துல இருந்து தண்ணி அடிக்ககூடாதுன்னு முடிவெடுத்து முத நாளே ஒரு வாரத்துக்கு சேத்து அடிச்சி
ரெண்டு நாளைக்கி மட்டையாயிருவாங்க..!!

நீங்களும் இதுமாதிரி ஏதாவது தீர்மானம் போட்டு இருப்பீங்க..!!
அதை பின்னூட்டத்தில எழுதினிங்கன்னா அதையும்
என் லிஸ்ட்ல சேத்துக்குவேன்..!!  ஹி.ஹி..ஹி...
கோபத்துல இவன் பிளாக்குக்கு இனிமே வரக்கூடாதுன்னு
தீர்மானம் போட்றாதீங்க..!!

பதிவுலக நண்பர்கள் அவர்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் 
உளம்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!
என்றும் அன்புடன்....

Post Comment

20.12.10

பக்தி சிகாமணி..!!

ரொம்ப நாளாச்சு பதிவு போட்டு..!!
நீங்கல்லாம் வருத்தத்துல இருக்கறது தெரியுது..!!
(நாங்க எப்ப சொன்னோம்ன்னு கேட்டு என்ன அழ வைக்க கூடாது)

ஒரு நல்ல விஷயத்தோடஆரம்பிக்கலாம்..!!
எப்பயும் நம்ம பலபேருக்கு உத்வேகத்தை கொடுக்கறவங்களா இருக்கணும்.
எப்படி..?  பதிவுலகத்தில இணையணும்ன்னு ஆசைப்படறவங்க
நம்ம "அமீரகச் சிங்கம்"தேவா அவர்களோட பதிவுகளை
படிச்சாங்கன்னா இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு
படிக்கறதோட நிறுத்திக்குவாங்க..!!
ஆனா,இந்த சேலம் "சிங்கம்" (!?)உயர்திரு.தேவா அவர்களோட பதிவுகள படிச்சாங்கன்னா உடனே ஒரு பிளாக் ஆரம்பிச்சிருவாங்க..!!
எப்படி..?! இவனெல்லாம் எழுதறப்போ நாம இன்னும்
நல்லாவே எழுதலாம்ன்னு நினைப்பாங்க..!!
இப்படிதான் உத்வேகம் தரணும்.ஹி.ஹி..ஹி...

நகரம் எல்லாம் நரகம் ஆயிட்டு வருது..!!
(சத்தியமா சுந்தர்.சி படத்த சொல்லலீங்க)
கார்த்திகை மார்கழி மாசம் வந்தாலே நம்மாளுங்களுக்கு
பக்தி கரை புரண்டு ஓடும்..!!

திருப்பாவையும்,திருவெம்பாவையும்இயற்றியஆழ்வார்களும்,
நாயன்மார்களும் பயப்படற அளவுக்கு நம்மாளுங்க 
எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு எல்லாம் போடுவாங்க..!!

சாமிய காலங்காத்தால எழுப்புகிறேன் பேர்வழின்னுட்டு 
இந்த பாட்டு எல்லாம் போடறாங்களாம்.
சாமி எந்திரிக்கறாரோ இல்லையோ நம்மள எழுப்பிருவானுங்க..!!
கோயில்ல அவனும் தூங்காம, நல்லா தூக்கம் வர்றவனையும்
தூங்க விடாம , காலையில 4 மணிக்கே அந்த கிழிஞ்சு போன ஸ்பீக்கர்ல அரதப்பழசான பக்தி பாடல்களை போடுவானுங்க பாருங்க..!!
பக்தி வரும்ன்னு நினைக்கறீங்க..!! கோபம் கோபமா வரும்..!!

வைகுண்ட ஏகாதசிக்கு பெருமாள் கோவில் போனீங்களா..?!
வருஷாவருஷம் பக்தி அதிகமாயிட்டே வருது..!!
பெருமாளுக்கும்(?!)  வருமானம் அதிகமாயிட்டே இருக்கு..!!
சொர்க்கவாசல் திறந்தா ஏன் இந்த அரசியல்வியாதிங்க
முதல்ல போறாங்க தெரியுமா..?!
அவங்கல்லாம் இப்டிதான் சொர்க்கத்துக்கு போகமுடியும்..!!
உண்மையில நரகத்துக்குதான் போவாங்க..!!

பல வருஷமா சபரிமலைக்கு போயிட்டு இருந்த நம்பியார் சாமி கூட
அவர குருசாமின்னு சொல்லிகிட்டதில்ல..!!
 ஆனா இங்க லோக்கல் சாமிங்க இருக்கும் பாருங்க நேத்து வரைக்கும் டாஸ்மாக்கே கதின்னு கிடந்தவங்க மாலை போட்டுகிட்டு ஊர் பூரா
நோட்டீஸ்ல குருசாமின்னு அவங்களே போட்டுக்குவாங்க..!!
அய்யப்ப சாமிக்கே ரூல்ஸ் சொல்லித் தருவாங்க இவங்க..!!

கடவுள் முன்னால எல்லாரும் சமம்ன்னு சொல்லுவாங்க..!!
ஆனா பாருங்க..!!
இந்த மனுச பயபுள்ளைங்க சிறப்பு தரிசனம்ன்ற பேர்ல
300 கொடுத்தா முன்னால பாக்கலாம்.
100 கொடுத்தா பின்னால பாக்கலாம்ன்னு
சாமிய வச்சு பிஸினஸ் பண்ணுதுங்க..!!
பக்தி எப்ப வியாபாரமாச்சோ அப்பவே நான் கோவிலுக்கு போறத விட்டுட்டேன்ன்னு நடிகர் சிவக்குமார் ஒரு நிகழ்ச்சியில சொல்லியிருப்பாரு.அவரோட கருத்தைதான் நான் வழிமொழிகிறேன்.

"கணவனே கண்கண்ட தெய்வம்"
"மணாளனே மங்கையின் பாக்கியம்"
"கல்லானாலும் கணவன்
புல் அடிச்சாலும் (ச்சீ..நாக்கு குளறிடிச்சி) புல்லானாலும் புருஷன்"
 பழமொழி எல்லாம் கேக்கறப்ப ஓரே சிரிப்புசிரிப்பா வரும் எனக்கு..!!
இவ்ளோ சொல்றாங்களே என்னையே தினமும் கும்புட்டுக்கம்மான்னு சொன்னா கேக்க மாட்டாங்க எங்க வீட்டு தங்கமணி..!!
கோயிலுக்குதான் போவேன்னு அடம் பிடிப்பாங்க..!!
இதுக்கப்புறம் பூஜை நடக்கும் பாருங்க..!! சாமிக்கு இல்லீங்க எனக்கு..!!

நான் மனசையே கோவிலா வச்சுருக்கறதால(?!) கோவிலுக்கு போறதே பொங்கலுக்கும் புளியோதரைக்கும்தான். அதுலயும் இந்த ஆஞ்சனேயர் கோவில் வடை அவ்ளோ திவ்யமா இருக்கும்.எங்கயும் இந்த டேஸ்ட் வரமாட்டேங்குது .ஹி.ஹி..ஹி...

கோவிலுக்கு போனா அமைதி தானா வரணும்.
ஆனா,இப்பல்லாம் அங்க நடக்கறத பாத்தா கோபம்தான் வருது..!!
போன வாரம் வேண்டுதலுக்காக ஒரு கோவிலுக்கு போயிருந்தோம். உண்மையிலேயே மனசு ரொம்ப அமைதியா இருந்துச்சு.நகரத்தோட(நரகத்தோட..) பாதிப்புகள் இன்னும் அங்க வரல ஒரு அழகிய கிராமம். ஒரு அழகிய கோவில்.படங்கள் கீழே...










கரூர்ல இருந்து ஒரு 15 KM தள்ளி வெஞ்சமாங்கூடலூர்
(வெண்சாமரக்கூடலூர்)என்கிற ஊர்ல இருக்கு இந்த கோவில்.





Post Comment